ஆரம்ப துணை சுகாதார மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தா.பேட்டை, ஜன.11:  முசிறி அருகே  உள்ள வாளவந்தியில் கால்நடை மருத்துவமனையும், ஆரம்ப துணை சுகாதார மையமும்  அமைத்திட வேண்டுமென திருச்சி கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.தா.பேட்டை ஒன்றியம், வாளவந்தி பகுதியில் வசிக்கும்  பொதுமக்களுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டால் தா.பேட்டை அல்லது முசிறி பகுதிக்கு  சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இதனால்  நோயாளிகள் பெரிதும் சிரமம் அடைகின்றனார். மேலும் விவசாய பகுதியான  இப்பகுதியில் கால்நடை வளர்ப்பை நம்பியே பெரும்பாலோனார் உள்ளனர். எனவே  கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கவும், விவசாயிகள்  சிரமப்படுகின்றனர். தனியார் கால்நடை மருத்துவர்களை அழைத்து சிகிச்சை  அளிக்கும்போது அதிக செலவாகிறது. எனவே கால்நடை மருத்துவமனையும் அமைத்து தர  திருச்சி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அனுப்பி  உள்ளனர்.

Related Stories: