சிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் ரூ.58 லட்சம் செலவில் போக்குவரத்து காவல் நிலையம் நவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டது. இதனை நேற்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து போக்குவரத்து காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று நகரில் இயங்காத சிக்னல்களை இயங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.