நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

திருவெறும்பூர், ஜன. 10: திருவெறும்பூர் அருகே கல்லணை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவானைக்கோவில் அருகே உள்ள உத்தமர்சீலி நடுதெருவைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி நீலாவதி (44). இவர் சர்க்கார்பாளையம் கல்லணை ரோட்டில் பனையகுறிச்சியில் உள்ள தனியார் பேரிச்சம்பழ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்றுமதியம்   வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில்  வந்த 2 மர்ம நபர்கள் நீலாவதி அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க சங்கிலியை அறுக்க முயன்றனர். அப்போது நீலாவதி சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டதால் செயின் அறுந்து திருடர்கள் கையில் சிக்கிய 3 பவுனுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து நீலாவதி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: