திருச்சி, ஜன.10: திருச்சியில் நடந்த குடியரசு தினவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கலெக்டர் ராஜாமணி பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகளை காவல்துறையினர் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து பேசியதாவது:திருச்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி போன்ற வசதிகளை காவல்துறையினர் செய்ய வேண்டும். சுகாதாரம், குடிநீர் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கல்வித் துறை அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.