மானாமதுரை, ஜன.8: மானாமதுரையில் என்ஜினியரை கத்தியால் குத்தி டூவீலரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மானாமதுரை குலாலர்தெருவை சேர்ந்த கோபால் மகன் ஆண்டவர்(41) இவர் மானாமதுரையில் கட்டிட பொறியாளராக உள்ளார். நேற்று மதியம் தாயமங்கலம் ரோட்டில் உள்ள பங்கில் டூவீலரில் பெட்ரோல் போட சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். ஆண்டவரும் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்றார். தாயமங்கலம் ரோட்டில் சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர் அருகில் உள்ள இடத்திற்கு கொண்டுபோய் விடுமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பொறியாளர் ஆண்டவரை மர்மநபர் கத்தியால் தலை, கை, கால்களில் குத்திவிட்டு டூவீலரை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றார்.