சென்னை, ஜன. 4: சென்னை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (36). பிரபல ரவுடி. இவர் மீது அண்ணாநகர், அரும்பாக்கம், அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அண்ணாநகர் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அன்னை சத்யா நகரில் யார் பெரிய தாதா? என்பதில் அதேப் பகுதி ராபர்ட் (26) என்பவருக்கும், இவருக்கும் இடையே போட்டி இருந்ததாக தெரிகிறது. இதனால் ராபர்ட்டை சந்தானம் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் சிறைக்கு சென்ற சந்தானம் ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ அன்னை சத்யாநகரிலிருந்து தனது குடும்பத்தை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி விநாயகபுரத்தில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடியேற்றினார். ரவுடி சந்தானத்தை கொலை செய்ய ராபர்ட் குழுவினர் பலமுறை முயற்சி ெசய்தும் தோல்வியில் முடிந்தது. சந்தானம் அரும்பாக்கத்தில் வசித்து வந்தாலும் அவரது தாய் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சந்தானம் தனது தாயை பார்க்க அன்னை சத்யா நகருக்கு பைக்கில் வந்துள்ளார். தகவலறிந்து, ராபர்ட் தரப்பினர் அன்னை சத்யா நகர் 8வது தெருவில் மறைந்து இருந்தனர். சந்தானம் வந்தபோது, அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். கண்ணில் விழுந்து எரிச்சலில் நிலைதடுமாறிய சந்தானம் கீழே விழுந்தார்.