அஞ்சுகிராமம், ஜன.3: அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுன் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணன் அவருக்கு சொந்தமான ஓடு மற்றும் ஓலை ேவய்ந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ஓடு போட்ட பகுதியை வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி அடித்து வெளியே ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டார்.