ராமநாதபுரம், டிச.25: ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் அனுமதி இன்றியும், சுகாதார மற்ற முறையிலும் ஆட்டுகறி, மீன், காய்கறிகளை விற்பனை செய்து வந்த கடைகளை அகற்றி, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த பொருட்களை அழித்தனர். சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் ஆலோசனைப்படி, கலெக்டர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் ஆட்டுகறி, மீன்கள், காய்கறிகடைகளை அகற்றி சுகாதார மற்ற முறையில் விற்பனை செய்த சுமார் 20 கிலோ மதிப்புள்ள ஆட்டு இறைச்சிகளை அழித்தனர்.