ராமேஸ்வரம், டிச.25: ராமேஸ்வரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த வாகன விபத்தில் பலத்த காயமடைந்த கேரளா சுற்றுலா பயணிகள் இருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 22 பேர் நேற்று ஒரு வேனில் ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் மதியத்திற்குமேல் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாறையடி கடற்கரை துறைமுக அருகில் வேன் சென்றபோது, எதிரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த டாட ஏஸ் வேன் ஒன்று சுற்றுலா பயணிகள் சென்ற வேன் மீது விபத்து ஏற்பட்டது.