கும்பகோணம், டிச. 25: நவக்கிரக கோயில்களில் திருப்பணி துவங்ககோரி கும்பகோணத்தில் இந்து மகா சபா சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடந்தது.தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ராகு பகவான், கஞ்சனூர் சூரிய பகவான் கோயில், நாகை மாவட்டம் செவ்வாய் பகவான் வைத்தீஸ்வரன் கோயில், கேது பகவான் கோயில் ஆகிய 4 கோயில்களிலும் திருப்பணி செய்து 12 ஆண்டுக்கு மேலாகியும் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை செய்த பின்பும் இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.