மதுரை, டிச. 20:மதுரை தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (வெள்ளி) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மதுரை தெற்கு (மெட்ரோ) மின்பகிர்மான செயற்பொறியாளர் சுஜா தலைமை வகிக்கிறார்.கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோயில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சி, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, ஊரகம் அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து மின்நுகர்வோரும் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயனடைலாம்.