திருவள்ளூர், டிச. 20: திருவள்ளூர் அடுத்த காக்களூர் இந்தியன் வங்கி நகர் பகுதியில், 30 அடி சாலையில் 15 அடி சாலையை ஆக்கிரமித்து மின்கம்பங்கள் உள்ளன. வர்தா புயலில் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் அறுந்துவிழுந்த ஒயர்களும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் இந்தியன் வங்கி நகர் அருகே கிழக்கு குளக்கரை சாலை வழியாக, ஊத்துக்கோட்டைக்கு உயரழுத்த மின் கம்பிகள் செல்கிறது. இந்த இடத்தில், அரசு பள்ளிகளும் உள்ளது. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த மின்கம்பங்கள் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலில் சாய்ந்தது. மேலும், மின் ஒயர்களும், மின்கம்பங்களை தாங்கி பிடிக்கும் கம்பிகளும் அறுந்து விழுந்தன. மேலும், 30 அடி சாலையில் 15 அடியை ஆக்கிரமித்து மின்கம்பங்களும் உள்ளது.