வாழப்பாடி,டிச.19: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. இதில் 90 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 20 சக மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.