தொண்டி, டிச.19: தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சியில் வீடு வீடாக சென்று தொழுநோய் கண்டறிதல் பணியினை சுகாதார துறையினர் ஈடுபட்டனர். தொழுநோய் ஒரு பாக்டீரியா கிருமியால் பரவுகிறது. ஆரம்ப நிலையில் தொடர் சிகிச்சை அளித்தால் நோயை குணப்படுத்தி விடலாம். ஆரம்ப சிகிச்சை பெற தவறினால் நரம்பில் பாதிப்பு ஏற்ப்பட்டு ஊனம் ஏற்படும். உடம்பில் சிவந்த உணர்ச்சியில்லாத தேமல், கை கால்கள் நரம்புகள் தடுத்து உணர்ச்சி இல்லாமல் இருப்பது தொழுநோயின் அறிகுறியாகும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தெரு, மேற்கு தெரு, படையாச்சி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தொழுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.