தஞ்சை,டிச.19: தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான வள்ளலார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளரிடம் தெரிவித்தனர். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ சக்திவேல், ஆர்டிஓக்கள் தஞ்சை சுரேஷ், கும்பகோணம் வீராசாமி, பட்டுக்கோட்டை மகாலட்சுமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.