பூதலூர் காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி, டிச.19: தஞ்சை மாவட்டம் பூதலூர் காவல் நிலையத்தில் தஞ்சை டிஐஜி லோகநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது காவல் சரகத்தில் பூதலூர் மற்றும் செங்கிப்பட்டி காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள், தீர்வு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விசாரித்தார். மேலும் நிலைய பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார். பூதலூர் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், பூதலூர் சப்இன்ஸ்பெக்டர் சித்ரா, செங்கிப்பட்டி சப்இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் ஆகியோர் டிஐஜியின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பூதலூர் காவல் சரகத்தில் மணல் திருட்டு மற்றும் அனுமதியின்றி மது விற்பனை ஆகியவற்றை முழுமையாக தடுப்பதுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாருக்கு டிஐஜி லோகநாதன் உத்தரவிட்டார்.

Related Stories: