எப்எக்ஸ் பாலிடெக்னிக் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

நெல்லை, டிச.19: தருவை எப்எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாணவ மாணவியர்களுக்கு சுவர் ஓவியப்போட்டி, ஆற்றல் சேமிப்பு வாசகங்கள் படைத்தல், ஆற்றல் சேமிப்பு கருத்தரங்கம் போன்றவை நடந்தது. மாணவர்கள் ஆற்றல் பாதுகாப்பை வலியுறுத்தி எப்.எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து  நெல்லை மாவட்ட கமிஷனர் அலுவலகம் வரை எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை சேரன்மகாதேவி ஏஎஸ்பி ஆசிஸ்ராவத்  தொடங்கி வைத்தார். ஸ்காட் கல்வி குழுமங்களின் பொதுமேலாளர் இக்னேஷியஸ் சேவியர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ரூபஸ் முன்னிலை வகித்தார்.

Related Stories: