நாட்றம்பள்ளி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

நாட்றம்பள்ளி, டிச.18: நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பைனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கமல்(30), கூலி தொழிலாளி. இவர் கடந்த 15ம் தேதி மாலை நாட்றம்பள்ளியில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றார். சுண்ணாம்புகுட்டை அருகே சென்றபோது, தருமபுரி அடுத்த பென்னகரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(30), மாதப்பன்(50) ஆகியோர் வந்த பைக்கும், கமல் பைக்கும், நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: