நாட்றம்பள்ளி, டிச.18: நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பைனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கமல்(30), கூலி தொழிலாளி. இவர் கடந்த 15ம் தேதி மாலை நாட்றம்பள்ளியில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றார். சுண்ணாம்புகுட்டை அருகே சென்றபோது, தருமபுரி அடுத்த பென்னகரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(30), மாதப்பன்(50) ஆகியோர் வந்த பைக்கும், கமல் பைக்கும், நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.