நிலக்கோட்டை சங்கத்தில் நகை கடன் வழங்கல்

செம்பட்டி, டிச. 16:  நிலக்கோட்டை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் முதன்முறையாக நகை கடன் வழங்கும் விழா நடந்தது.

சங்க தலைவர் நாகராஜன் தலைமை வகிக்க, துணைத்தலைவர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார், செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசுகையில்,

 ‘‘குறைந்த வட்டியில் ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரை நகை கடன் வழங்கப்படும்.  கிராம் ஒன்றுக்கு ரூ.2100 வரை கிடைக்கும். நிலக்கோட்டை வட்டார மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்’’ என்றார். இதில் நிர்வாக உறுப்பினர்கள் கலைச்செல்வன், சாந்தி, பாண்டி, தமிழ்மன்னன், திருப்பதி, மலர்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: