ஜெயங்கொண்டம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு

ஜெயங்கொண்டம் ,டிச.16: ஜெயங்கொண்டம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட எஸ்பி னிவாசன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் ஜெயங்கொண்டம் உட்பட்ட 9 காவல் நிலையங்களில் இருந்து வரப்பெற்ற பதிவு செய்த வழக்குகள், பெரிய அளவில் நடைபெற்ற திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளில் ஆவணங்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வில் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது டிஎஸ்பி கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், வேலுச்சாமி, செல்வகுமாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: