காஞ்சி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர், டிச.16: உத்திரமேரூரில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட பொது  உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி அன்பழகன், எம்.எல்.ஏக்கள் எழிலரசன், அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் சுகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சென்னையில் நடக்கவுள்ள டாக்டர் கலைஞர் திருஉருவச் சிலை திறப்பிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

 வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், மத்தியில் ஆளும் பாஜ அரசினை அகற்றி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கும் நபரே மத்தியில் ஆட்சி அமைக்க நாம் தீவிரமாக பாடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பாரி, சன்பிராண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: