உத்திரமேரூர், டிச.16: உத்திரமேரூரில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி அன்பழகன், எம்.எல்.ஏக்கள் எழிலரசன், அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் சுகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சென்னையில் நடக்கவுள்ள டாக்டர் கலைஞர் திருஉருவச் சிலை திறப்பிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.