குடியாத்தம், டிச.16: தொடர்ந்து 4வது ஷிப்ட் செய்யக் கூறி அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் கண்டக்டர் திடீரென மயங்கி விழுந்தார். இச்சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் குடியாத்தம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி குடியாத்தம்- காட்பாடி டவுன் பஸ்சில் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து 13ம் தேதியும் அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் பணி செய்தார். பின்னர் மீண்டும் அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் 3வது முறையாக நேற்று முன்தினமும் பணிக்கு சென்றார். தொடர்ந்து 3 ஷிப்ட் பணி செய்த வெங்கடேசன், மாலையில் கலெக்ஷன் பணத்தை பணிமனையில் உள்ள அலுவலகத்தில் செலுத்த ெசன்றார்.