சென்னை, டிச.12: சிறு வயதில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த எனது அத்தை கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் இன்ஜினியர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பெண் இன்ஜினியர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது சொந்த ஊர் குன்னூர். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது அத்தையின் கணவர் கணேஷ் வீட்டில் தனியாக இருக்கும்போது என்னை பாலியல் ரீதியாக ெதால்லை கொடுத்தார். அதோடு இல்லாமல் காரில் செல்லும் போது, பின் இருக்கையில் அமர்ந்து தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து நான் அப்போதே எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் பிளஸ் 2 படிக்கும் போது வீட்டில் அனைவரும் இருக்கும் போது எனது அறைக்கு வந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அதன் பிறகு நான் இன்ஜினியரிங் படித்து முடித்தேன். படித்து முடித்த உடன் எனது பெற்றோர் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணம் ெசய்ய முடிவு செய்தனர். எனது அத்தை கணவர் கணேஷ் கொடுத்த தொல்லை காரணமாக நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன். இதனால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டேன்.