சட்டமன்ற தேர்தலில் வெற்றி காங்கிரஸ் கொண்டாட்டம்

திருவள்ளூர், டிச. 12:ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது. மத்திய பிரதேசத்தில், அதிக இடங்களை பிடித்துள்ளது.இதையடுத்து, திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதில், நகர தலைவர் சி.பி.மோகன்தாஸ், மாவட்ட நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.டி.அருள்மொழி, எம்.சம்பத், தளபதி மூர்த்தி, ஜி.எம்.பழனி, ஜெ.கே.வெங்கடேஷ், இருதயராஜ், வி.கே.பி.ஆறுமுகம், சரஸ்வதி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: