திங்கள்சந்தை, டிச. 12: கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் நெய்யூர் வட்டார கிறிஸ்துமஸ் விழா தாணிவிளை மெசியா மிஷன் திருச்சபையில் நடந்தது. ஆலன்கோடு இரட்சண்ய சேனை போதகர் திலிப்குமார் ஜெபம் செய்தார். தாணிவிளை மெசியாமிஷன் திருச்சபை போதகர் பென்னி ஜெபராஜ் பாடல்பாடி விழாவை நடத்தினார். நெய்யூர் வட்டார ஐக்கிய கிறிஸ்தவர் பேரவை செயலாளர் ஆசிரியர் தேவராஜ் வரவேற்றார். முரசங்கோடு கத்தோலிக்க திருச்சபை பங்கு தந்தையும், ஐக்கிய கிறிஸ்தவ பேரவை ெநய்யூர் வட்டார தலைவருமான அருட்பணி பெனிட்டோ தலைமை வகித்தார். நெய்யூர் வட்டார உதவி தலைவரும் சர்ச் ஆப் மெசியாமிஷன் திருச்சபையின் மெட்ரோ பொலிட்டன் மரியராஜ் முன்னிலை வகித்தார். ெநய்யூர் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சட்ட ஆலோசகர் ரமேஷ், இளைஞர் அணி தலைவர் ரோப்சன் நவீன்தாஸ், மகளிர் அணி தலைவி மேரி லில்லி புஷ்பம், வட்டார பொருளாளர் ஜாண் அர்னால்டு, மாவட்ட உதவி தலைவர் போதகர் ஞானதாசன், பேரின்பபுரம் சிஎஸ்ஐ போதகர் சுவாமிதாசன், மாவட்ட மகளிர் அணி தலைவர் அருள் சகோதரி பொனிபேஸ் பியாத்தா, முன்னாள் காவல்துறை ஐஜி ஜாண் நிக்கல்சன், தக்கலை வட்டார தளபதி மேஜர் சுபாஷ், செயற்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.