அரியலூர்,டிச.11: அரியலூர் மாவட்டத்தில் வருவாய் அலுவலரை தாக்கியதாகவும், தலைமையிடத்து துணை தாசில்தாரை அச்சுறுத்தும் விதமாக பேசியதாகவும் கூறி 3கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் டி.ஆர்.ஓ தனசேகரன் தலைமையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சு வார்த்தையில் கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தினர் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருதரப்பினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.