க.பரமத்தி, டிச.11: ஒரே வாரத்தில் கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.3உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கிராம புற பகுதியில் ஏராளமான தென்ணை மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். தங்களது தேவைக்கு மேல் உள்ள தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். பிறகு மீதம் உள்ள பருப்பினை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் விடப்படுகிறது.