வி.சி. கட்சி சாலை மறியல்

பண்ருட்டி, டிச. 11:  பண்ருட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு வரலாற்று புகழ்பெற்ற தலைவர்களின் படங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் அம்பேத்கர் புகைப்படம் மீது மர்ம நபர்கள் சிலர் கருப்பு வர்ணத்தை பூசி சேதப்படுத்தியதாக தெரியவந்தது. இதையறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் நகர செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அங்கு திரண்டு இச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: