சாயல்குடி, டிச.11: சாயல்குடி மாரியூர் சிவன் கோயில்களில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவள நிறவள்ளி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயிலில் உலக நன்மை, மழை பெய்ய வேண்டி 108 சங்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, மூலவரான பூவேந்தியநாதருக்கு 108 சங்கிலிருந்த புனித நீர், பால் மற்றும் 11 வகை சிறப்பு பொருட்களால் அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.