திமுக சார்பில் புயல் நிவாரணம்

ஒட்டன்சத்திரம், டிச. 11: ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைக்கிராமங்களான சிறுவாட்டுக்காடு, செட்டுக்காடுவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கும் விழா நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்வுமான அர.சக்கரபாணி அரிசி, துவரம்பருப்பு, உப்பு, பால்பவுடர், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சுமார் 200 குடும்பத்தினருக்கு வழங்கினார். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், துணை செயலாளர் சிவக்குமார், ஊராட்சி செயலர் செல்வராஜ், நிர்வாகி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: