போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் பிடிபட்டனர்

பூந்தமல்லி, டிச.11: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் திலகர்பாபு(38). இவர் நேற்று முன் தினம் இரவு வளசரவாக்கம், சவுத்ரி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி விசாரணை செய்தபோது, அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய திலகர்பாபு முயன்றார். உடனே,  அந்த நபர் செல்போன் மூலம் தகவல் கொடுத்து நண்பர்கள் இருவரை வரவழைத்தார். அவர்களுடன்  சேர்ந்து போலீஸ்காரர் திலகர் பாபுவிடம், அந்த நபர் தகராறு செய்தார். பின்னர் திலகர் பாபுவின் சட்டையை பிடித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் திலகர்பாபுவின் சட்டை கிழிந்தது.

 இந்த தகவல் அறிந்த ரோந்து போலீசார் அங்கு வந்தனர். தகராறு செய்த 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.  விசாரணையில் போரூர் சேக்மான்யத்தை சேர்ந்த பீட்டர் (26), தேவராஜ்(26), பிரபாகரன் (27), என்பது தெரியவந்தது.  இதையடுத்து 3 பேர் மீதும்  போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: