அம்பை, நவ. 30: அம்பையில் எல்ஐசியின் ஜீவன் சாந்தி பென்சன் திட்ட பாலிசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பைக் பேரணி நடந்தது. முதுநிலை மேலாளர் ஜேசுசுந்தரராஜ் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்து பேசினார். உதவி மேலாளர் பென்விட்சிங் வரவேற்றார். அம்பை எல்ஐசி அலுவலகம் முன்பு புறப்பட்ட பேரணி, அகஸ்தியர்பட்டி, சிவந்திபுரம், வி.கே.புரம் ரதவீதிகள் உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக மீண்டும் அம்பையில் முடிவடைந்தது.