ராமநாதபுரம், நவ.28: போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நேற்று சிஐடியூ சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சிஐடியூ சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தொழிலாளர் விரோத போக்கை கைவிடுதல். முறையாக விடுப்பு கொடுத்தாலும் அப்சென்ட் போட்டு மெமோ கொடுப்பதை தவிர்த்தல்,