நாகர்கோவில், நவ.27 : குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பு: பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படைப்புகளுக்கான கண்காட்சி அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 28ம்தேதி (நாளை) நடக்கிறது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப படைப்புகளுக்காக இக்கண்காட்சி நடைபெற உள்ளது.