தா.பேட்டை, நவ.23: தா.பேட்டையிலிருந்து - துறையூர் செல்லும் சாலையில் சிறுபாலம் கட்டும்பணி ஆமைவேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தா.பேட்டையிலிருந்து - துறையூருக்கு செல்லும் சாலையில் கண்ணனூர்பாளையத்திற்கு முன்பாக சிறு பாலம் கட்டும் பணி துவங்கி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடித்து போக்குவரத்து செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கண்ணனூரை சேர்ந்த சேகர் கூறும்போது, கண்ணனூர்பாளையத்திற்கு முன்பாக சிறு பாலம் கட்டும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தநிலையில் தற்போது எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.