வேலூர், நவ.23: வேலூர் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி மழையிலும் அகல்விளக்கு விற்பனை களைகட்டியது. ₹2 முதல் ₹2.50 வரையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் தமிழகத்தில் பிரசித்திபெற்ற திருவண்ணாமலையில் அண்ணாமலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழாவை காண்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.