விளாத்திகுளம், நவ.22: விளாத்திகுளத்தில் பல மாதங்களாக சீரமைக்கப்படாத சாலையை பொதுமக்களே சீரமைத்தனர். விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சத்யாநகர் நீர்தேக்க சாலை உள்ளது. இந்த சாலையை மேட்டுப்பட்டி, சித்தவநாயக்கன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விளாத்திகுளம் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. கடந்த 10 நாட்களாக விளாத்திகுளம் பகுதியில் பெய்த மழையால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் சகதி காடாக மாறியது.