திருச்சி, நவ.21: கஜா புயல் பாதித்த மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டுமென திருச்சியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கழக தோழர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல மன்றங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தேவையான உணவு, உடை மருந்துகள், குடிநீர் பாட்டில்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட வேண்டும்.