திருச்சி, நவ.21: செப்டம்பர் மற்றும் அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை மற்றும் மேல்நிலை துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :சமீபத்தில்வெளியிடப்பட்ட ௮ரசாணை (நிலை) எண்.164. அரசுத்தேர்வுகள் துறை, நாள்.6.8.2018ல் இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதி தோல்வியுறும் மாணவர்களுக்கு 2019 - 2020 கல்வியாண்டு முதல் மார்ச் மற்றும் ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு மற்றும் ஜுன் மற்றும் ஜுலை பருவ சிறப்பு துணைத்தேர்வு நடத்தவும், இடைநிலை மற்றும்மேல்நிலை பொதுத்தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் - பருவத்தில் நடத்தப்படும் துணைத்தேர்வினை ரத்து செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே2019 முதல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் பருவத்தில் இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத்தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது.