100 நாள் வேலை ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

சிவகாசி, நவ. 21: சிவகாசி யூனியன் அலுவலகத்தில், நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மண்டல அலுவலர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். யூனியன் ஆணையாளர்கள் சுப்பிரமணியம், சங்கரநாராயணன் முகாமை துவக்கி வைத்தனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சந்தானம் பயிற்சி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘100 நாள் வேலை  திட்டத்தில் பணிக்கு வருபவர்கள் காலை 8 மணிக்கு கண்டிப்பாக வரவேண்டும். பணி நேரத்தை ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும். தினமும் எவ்வளவு பணி முடிக்கப்பட்டுள்ளது. பணி நேரம் உட்பட பதிவேடுகள் முறையாக பதிவேடு செய்ய வேண்டும். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: