ராமநாதபுரம், நவ.21: வேதாளை கடலோர பகுதியில் குடியிருந்து வரும் மீனவர்கள் வலை உலர்தளம் மற்றும் வலைபின்னல் தங்குதளம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மண்டபம் அருகே மீனவர்கள் அதிகம் வசிக்கும் வேதாளை கிராமம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டு படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடலோரம் குடிசைகளை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வரும் இவர்கள் வலை உலர்தளம் மற்றும் வலைபின்னல் தங்குதளம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.