திருச்சி, நவ.20: திருச்சியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பேருக்கு ரூ.4.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார். கஜா புயல் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் ராஜாமணியிடம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நாச்சம்மாள் தனக்கு காதொலி கருவி கேட்டும், மணப்பாறை வட்டம், சரளப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாலெட்சுமி விதவை உதவித்தொகை கோரியும் மனு அளித்திருந்தனர்.