குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.4.68 லட்சம் மதிப்பில் 51 பேருக்கு நலத்திட்ட உதவி

திருச்சி, நவ.20:  திருச்சியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பேருக்கு ரூ.4.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார். கஜா புயல் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் ராஜாமணியிடம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நாச்சம்மாள் தனக்கு காதொலி கருவி கேட்டும், மணப்பாறை வட்டம், சரளப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாலெட்சுமி விதவை உதவித்தொகை கோரியும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.6,000 மதிப்பிலான நவீன காதொலி கருவியும், விதவை உதவித் தொகை என மொத்தம் 51 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Related Stories: