லாரி திருடியவர் கைது

மண்ணச்சநல்லூர், நவ.20: கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் லாரி திருடியரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் மகன் பிரபு (22). இவர் நேற்று கொள்ளிடம் டோல்கேட் ஒய் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தார். அப்போது அந்த வழியாக வந்த கொள்ளிடம் டோல்கேட் போலீசார் பிரபுவின் நடவடிக்கையை கண்காணித்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நாமக்கல் பகுதியில் நின்ற ஜீவானந்தம்(49) என்பவரின் லாரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடியதாக தெரிவித்தார். பிரபு அளித்த தகவலின்படி லாரியை போலீசார் மீட்டு பிரபுவை கைது செய்தனர்.

Related Stories: