திருக்காட்டுப்பள்ளி, நவ. 20: திருக்காட்டுப்பள்ளி அருகே மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூருக்கு அனுமதியின்றி விற்பனை செய்ய மதுபாட்டில்களை பைக்கில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன், வரகூர் சென்று அந்த வழியாக 3 பைக்குகளை நிறுத்தினார். அப்போது அதில் வந்த ஒருவர், பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினார். பின்னர் 2 பேரை பிடித்து விசாரித்ததில் அனுமதியின்றி விற்பனை செய்ய மதுபாட்டில்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 வாகனங்கள், 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வரகூர் பழைய தெருவை சேர்ந்த மணிவேல் (73), கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்த சின்னப்பன் (33) என்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.