திருக்காட்டுப்பள்ளி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பைக்குகள் பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 20:  திருக்காட்டுப்பள்ளி அருகே மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூருக்கு அனுமதியின்றி விற்பனை செய்ய மதுபாட்டில்களை பைக்கில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன், வரகூர் சென்று அந்த வழியாக 3 பைக்குகளை நிறுத்தினார். அப்போது அதில் வந்த ஒருவர், பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினார். பின்னர் 2 பேரை பிடித்து விசாரித்ததில் அனுமதியின்றி விற்பனை செய்ய மதுபாட்டில்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 வாகனங்கள், 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வரகூர் பழைய தெருவை சேர்ந்த மணிவேல் (73), கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்த சின்னப்பன் (33) என்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெண் தற்கொலை: கும்பகோணம் அடுத்த மாடாகுடி மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டியன் மகள் பானுப்பிரியா (25). இவருக்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் பானுப்பிரியாவுக்கு மாப்பிள்ளை அமையவில்லை. இதனால் மனவேதனையில் பானுப்பிரியா இருந்தார். இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த எலி கேக்கை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: