ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

மண்ணச்சநல்லூர், நவ.15: சமயபுரம் பகுதியில் பன்றி காய்ச்சல் குறித்து ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மேலும் பேரூராட்சி சார்பில் சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு செய்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சேகர், முதன்மை எழுத்தர் சதீஸ்கிருஷ்ணன் பள்ளி தலைமையாசிரியர் எட்வின், துணை தலைமை ஆசிரியர் குணசேகரன், முதுகலை ஆசிரியர்கள் செல்வம், முருகன், மற்றும் பள்ளி மாணவர்கள் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் சமயபுரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: