கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

சேதுபாவாசத்திரம், நவ. 15:  மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற உடையநாடு அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் ேதாட்டக்குறிச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பங்கேற்று கட்டா, குமிட்டே ஆகிய பிரிவுகளில் சேதுபாவாசத்திரம் அடுத்த உடையநாடு அரசு உயர்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவன் பிரவீன் (11) ஒரு தங்கம், வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவன் பிரவீனை பள்ளி தலைமையாசிரியர் ரவிகுமார், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் பாண்டியன், ஆசிரியர்கள் ஜெயகாந்தி, ராஜவர்மன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Related Stories: