பசுபதீசுவரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கரூர்,நவ.15:  கரூர் பசுபதீசுவரர் கோயிலில் கந்தசஷ்டிவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வள்ளி தெய்வானை உடனாகிய ஆறுமுகப்பெருமாள் சுவாமி அலங்கரிக்கபட்டு வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: