கீழக்கரை, நவ. 15: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சியில் பணி செய்யும் தூய்மை காவலர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சியில் பணி செய்து வரும் தூய்மை காவலர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஒரு நபருக்கு நாளென்றுக்கு 205 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்துள்ளனர். இதை தற்போது ரூபாய் 80தாக குறைத்து வழங்கி வருவதாகவும், அதுவும் கடந்த முன்று மாதங்களாக வழங்கவில்லை என்று இப்பணி செய்யும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.