தங்குவதற்கு மக்கள் தயக்கம் சூரசம்ஹார விழா இளம்பெண்ணிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு

திருப்புத்தூர், நவ. 15: திருப்புத்தூர் அருகே இளம்பெண்ணிடம் 6 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே நெற்குப்பை-சிங்கம்புணரி சாலையிலுள்ள மூங்கில்புரத்தை சேர்ந்தவர் கருப்பையா. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வளர்மதி. (33). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை கடைக்கு வந்த 3 இளைஞர்கள் ரூ.100 கொடுத்து பொருட்கள் வாங்கினர். சில்லரை கொ டுக்க வளர்மதி குனிந்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்செயினை பறித்து கொண்டு 3 பேரும் டூவீலரில் தப்பி விட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில் நெற்குப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: