ஆர்.எஸ்.மங்கலம், நவ. 15: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கஜா புயல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.கஜா புயல் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்த நாள் முதல் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், மீன்வளத் துறையினர், சுகாதாரத்துறை, காவல் துறையினர் என அனைவருமே பரபரப்புடன் முகாமிட்டு வருகின்றனர்இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி, மோர்பண்ணை, கடலூர், உப்பூர் மற்றும் திருவாடானை தாலுகாவில் உள்ள காரங்காடு, முள்ளிமுனை,